புனிதர்களின் அரசி ஆலய

ஆலய வரலாறு

கிபி 1970 ஆம் ஆண்டு கேகே நகர் உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் அது ரயில்வேஜங்ஷனை விட்டு வெகுதொலைவில் இருந்ததால் எல்லாம் தேவைகளுக்கும் நகரத்திற்கு சென்று வரபோதுமான போக்குவரத்து வசதிகள் அப்போது இருக்கவில்லை. அதிலும் குறிப்பாககத்தோலிக்கர்கள் தேவாலயம் சென்று திருப்பலிகாண்பது என்பது மிகப்பெரியசவாலாகவே இருந்தது.அந்நாட்களில் கேகேநகரில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கத்தோலிக்கர்களுக்கு என ஒரு தேவாலயம் அமையவேண்டுமென திருமதி ஸ்டெல்லாசெல்வராஜ், ஆசிரியைமிகுந்த ஆவல்கொண்டிருந்தார்.கேகே நகரில் குடியிருந்த அனைத்து கத்தோலிக்கர்களும் அதே கோரிக்கையை ஆசிரியை ஸ்டெல்லாவிடம் வைக்க, அவரும் ஆலயம் அமைக்கும் பணிக்கானதேடலில் ஆர்வமுடன் இறங்கினார்.அப்போது 1977 இல் திருச்சிமறைமாவட்ட ஆயரின் வேண்டுகோளின்பேரில்,திருச்சியில் நார்பட்சபையை முதன் முதலாக நிறுவ அருட்தந்தை பிரகாஷ் அவர்கள் செம்பட்டுவந்திருந்தார்.அவர் சார்லஸ் குருமடத்தில் தங்கி ஏர்போர்ட் காமராஜர் நகரில் உள்ள ஒருபள்ளியில் ஞாயிறுதோறும் திருப்பலி நிகழ்த்திவந்தார். இதை அறிந்த சிலகத்தோலிக்கர்கள் ஆசிரியை ஸ்டெல்லாவின் உதவியுடன் அருட்தந்தை பிரகாஷை சந்தித்து ஞாயிறுதோறும் கேகே நகரிலும் திருப்பலி நிறைவேற்றும் படிகேட்டுக்கொண்டனர்.

அந்நாளில் இருந்து, அதாவது 1977 அக்டோபரில் இருந்து 1979 ஜூலை வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் முக்கிய திருவிழா நாட்களிலும் ஆசிரியை ஸ்டெல்லாவின் வீட்டிலேயே திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கேகே நகரில் வசித்து வந்த பலகத்தோலிக்க குடும்பங்கள் இதை அறிந்து திருப்பலியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாளுக்குநாள் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கைபெருகவே, நமக்கென்று கேகே நகரில் ஒரு ஆலயம் அமைக்கவேண்டும் என அனைவரும் கூடி முடிவெடுத்தனர்.அதே கருத்தை அருட்தந்தை பிரகாசம் ஆசிரியை ஸ்டெல்லாவிடம் தெரிவிக்கவே, ஆசிரியை உடனே செயல்பட ஆரம்பித்தார். அவரது பெரும் முயற்சியால் அதற்கு தேவையான இடம் வாங்கப்பட்டு அருட்தந்தை ஜான்வேன் அட்ரீச்சம்(Fr. John VanAdrichen) அவர்களின் உதவியுடன் ஓட்டு கட்டிடம் கட்டப்பட்டு ஞாயிறு தோறும் மாலையில் திருப்பலியும் வார நாட்களில் All Saints Academy மழலையர் பள்ளியும் செயல்பட ஆரம்பித்தது.அந்த வருடத்திலிருந்து கேகே நகர் ஆனது ஒருங்கிணைந்த செம்பட்டு பங்கு பணித்தளத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.

1979 ஆம் ஆண்டு தொடங்கி கே கே நகர் ஆலயமானதுதமிழ் மற்றும் ஆங்கில மொழி பேசும் இறை மக்களைக் கொண்ட அனைத்து புனிதர்களின் ஆலயமாகவும்,All Saints Academyமழலையர் பள்ளியாகவும் ஓட்டு கட்டிடத்தில் இயங்க துவங்கியது. அதற்கு முன்பு வரை அதாவது 1902 இல் இருந்து 1977 வரை இயேசுசபைஅருள்தந்தையர்கள் வசம் இருந்த செம்பட்டு பங்கானது, நார்பட் அருட்தந்தையர்கள் வசம் ஒப்படைக்கப்படவே 1977 ஆம் ஆண்டு தொடங்கி ஒருங்கிணைந்த செம்பட்டு பங்கின் முதல் பங்கு தந்தையாக அருட்தந்தை பிரகாசம் அவருக்கு உதவியாக அருட்சகோதரர்ஜான் அமல்ராஜ் அவர்களும்தனது சேவை பணியை செம்பட்டிலேயே துவங்கினர். இவர்களைத் தொடர்ந்து பாதர் பெலிக்ஸ்ஓப்ரேம்செம்பட்டு வந்து தங்கி இவர்களுடன் பணியாற்றினார்.இவர்களைத் தொடர்ந்து அருட்தந்தை ஆல்ஃப்ரெட்பெர்னாண்டோஓப்ரேம்அவர்கள் 1980-1988 வரை செம்பட்டின்பங்கு தந்தையாக பணியாற்றினார்.அவர் தனது பணியின் போது மிகுந்த சிரமப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் செம்பட்டு பங்கிலே அருட்தந்தைதிரவியம்ஓப்ரேம்அவர்கள்,அருட்தந்தைஃபாபியன்ஓப்ரேம்அவர்கள்,அருட்தந்தைஅடைக்கல சாமி ஓப்ரேம்அவர்கள்அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் ஓப்ரேம்அவர்கள்,அருட்தந்தைலூர்து ராஜ் மற்றும் அருட்சகோதரர் அமல்ராஜ் ஓப்ரேம்ஆகியோர்இணைந்து பணியாற்றினார். அவர்களைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு அருட்தந்தைபால் கில்பட் ஓப்ரேம்அவர்கள் செம்பட்டு பள்ளியின் நிர்வாக பொறுப்பையும் மற்றும் நார்பர்ட்அருட்தந்தையர்கள் இல்லத்தையும் ஒருசேர பொறுப்பேற்று நடத்தி வந்தார்.அவருக்கு அருட்தந்தைமேத்யூ ஒலசில்அவர்கள்மற்றும் அருட்தந்தைஜான் பிரான்சிஸ் போன்றோர் எல்லா வகையிலும் உற்ற துணையாக இருந்து வந்தனர்.

அதன்பிறகு 1995ஆம் வருடம் அருட்தந்தைபெஞ்சமின்ஓப்ரேம் அவர்கள் கேகே நகரில் தங்கி பணியாற்றும் இல்ல குருவாக (Residential Priest) நியமிக்கப்பட்டார்.அவரது பணிக்காலம் சிறிது காலம் மட்டுமே கேகேநகரில்நீடித்தது.அவரைத் தொடர்ந்து 1996 முதல் 1998 வரை அருட்தந்தை சேவியர் அமிர்தம் அவர்கள்கேகே நகரில் தங்கி பணியாற்றும் இல்ல குருவாகபணியைதொடர்ந்தார்.அவருக்கு பிறகு அருட்தந்தைபெனடிக்ட்பால்ராஜ்ஓப்ரேம்அவர்கள்இல்ல குருவாக நியமிக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு தொடங்கி,அருட்தந்தை ஜான்பிரான்சிஸ் அவர்களின் முயற்சியுடன் அனைத்து புனிதர்களின் அரசி ஆலயமாக முடிவு செய்யப்பட்டு, ஆடம்பர தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டது.

அவ்வாண்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித் தனியே திருப்பலிகள் நடைபெறதுவங்கியது.அதுமுதல்தமிழ் மற்றும் ஆங்கில இறை மக்கள் அனைவரும் இணைந்து அனைத்து நிகழ்வுகளிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். இவரைத்தொடர்ந்துகிபி 2010 முதல் 2012 வரைமீண்டும் அருள்பணி பெனடிக்பால்ராஜ் ஓப்ரேம் அவர்களே பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவர்தனது பணிகாலத்தில் விட்டுச்சென்ற பணிகளை செவ்வனே செய்து முடித்தார். அருட்பபணியாளர்களின் வசதிக்காகவும் ஆலய சுரூபங்களையும் திருவழிபாட்டுப் பொருட்களை பாதுகாக்கவும் sacristyஐ விரிவுபடுத்திகட்டினார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரிடமும் அன்புடன் பேசி பழகிகுடும்பத்தில் ஒருவரைப்போல் நினைக்கும் அளவிற்கு இறை மக்களுக்கு நல்ல தொரு வழிகாட்டியாகவும் மிகச்சிறந்த ஆன்மீக ஆலோசகராவும் திகழ்ந்தார். அருட்தந்தை பெனடிக்ட் அவர்கள் அருட்தந்தை ஆரோக்கியசாமி அவர்கள் மற்றும் அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் அவர்களின் கூட்டு முயற்சியாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும் அனைத்து புனிதர்களின் அரசி ஆலய புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அன்றைய திருச்சி மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோஅவர்களால் 19 செப்டம்பர் 1999 அன்று அர்ச்சிக்கப்பட்டுதனி தேர்வு நிலை பங்காக அறிவிக்கப்பட்டது.அந்த நாள் அதாவது 19-09-1999 கேகே நகர் பங்கு இனறமக்களுக்கு என்றுமே மறக்க முடியாத ஒரு பொன்னான நாளாக அமைந்தது என்றே கூறலாம். நமது ஆலயம் அனைத்து புனிதர்களின் அரசிஆலயமாகஅர்ச்சிக்கப்பட்டபிறகு முதல் பங்கு தந்தை என்று பெருமை அருட்தந்தை பெனடிக்ட்பால்ராஜ் அவர்களையே சாரும்.அருட்தந்தை அவர்கள் கிபி 1999 முதல் 2002 வரை தனது இறைப் பணியினை நம் பங்கில் சீரும் சிறப்புமாக ஆற்றினார். தனது பணி காலத்தில் ஓய்வில்லாமல்ஆலயம் கட்டும் பணியை மற்ற அருட்தந்தையர்களின் உதவியோடும் பங்கு இறை மக்களின் முழு ஒத்துழைப்போடும் மிக நேர்த்தியாக செய்து முடித்தார்.அது மட்டும் இல்லாமல் இறை மக்களின் வேண்டுகோளின் பேரில் நம் ஆலய மணிக்கூண்டையும்கட்டி முடித்தார்.திருப்பலிக்கான அருட்பணியாளர்களின் தயாரிப்பிற்கெனஆலயத்தின் உள்ளே Sacresty ஐயும் கட்டினார்.

இவருக்கு அடுத்ததாக அருள்பணி லூர்து ராஜ்ஓப்ரேம்அவர்கள் நம் பங்கின் பங்கு தந்தையாக கிபி 2002 முதல் 2003 வரை பணியாற்றினார்.அவரது பணிக்காலம் மிகக் குறைவாகவே இருந்தாலும் மக்களிடையே பல ஆன்மீக காரியங்களை முன்னெடுத்து அவர்களை ஆன்மீக பாதையில் வழி நடத்தினார்.அதன் பிறகு கிபி 2003 முதல் 2005 வரை அருட்பணி அடைக்கல சாமி ஓப்ரேம் அவர்கள் நம் பங்கின் பங்கு தந்தையாக பொறுப்பேற்று மக்களை ஆன்மீக காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடசெய்தார். அடுத்ததாக கிபி 2005 முதல் 2010 வரை அருள்பணி மரியதிரவியம் ஓபிரேம் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.இவர்தனது பணிகாலத்தில் இறை பணிக்காக தன்னையே அர்ப்பணித்து நம் ஆலய வளர்ச்சிக்காகவும் பங்கு மக்களின் வளர்ச்சிக்காகவும்,இறை மக்களுக்கு நல்ல ஆன்மீகவழிகாட்டியாகவும் நல்ல நட்புடன் பழகும் பாசமிகு அருட்தந்தையாகவே இவர்திகழ்ந்தார், அடுத்ததாககிபி 2012 முதல் 2015 வரை அருட்பணி ஆரோக்கிய செல்வன் ஓப்ரேம் அவர்கள் நம் பங்கின் பங்குதந்தையாக பொறுப்பேற்றார். அனைவரிடமும் புன்னகையுடன் கூடிய நட்புடன் பழகும் குணம் கொண்டவர்.இவர் இறைமக்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களின் நிறைகுறைகளைகேட்டு அறிந்து அவர்களை ஆன்மீகத்தில் மிக அருமையாக வளர்த்தெடுத்தார். இவர் தனது பணி காலத்தில் பங்கின் வளர்ச்சிக்காக பல ஆன்மீக காரியங்களை முன்னெடுத்துசெய்தார்.

இறைமக்கள் எந்நேரமும் இறைவனிடம் வேண்டுமிடமாக, ஆலய வளாகத்தில் குழந்தை இயேசு வின்சுரூபம் தாங்கிய கெபியை கட்டினார். இந்த கெபியில் இந்நாள் வரையில் எந்நேரமும் மக்கள் வந்து வேண்டுதல் செய்து குழந்தை இயேசுவின் ஆசீரைபெற்று செல்கின்றனர். மேலும் புனிதர்களின் அரசி அன்னையின் கொடி வானிலே பிரம்மாண்டமாக பறக்க உயரமான தொரு கொடிகம்பத்தை அமைத்தார்.நமதுகிளை பங்கான காந்திநகர் புனித செபஸ்தியார் ஆலயத்தை, அனைத்து இறைமக்களின் ஒத்துழைப்போடு புதுப்பித்தார். இவர்தன் பனிக்காலம் முழுவதுமே கேகே நகர் பங்கு மக்களுக்காகவும் பங்கின் வளர்ச்சிக்காகவும் பலசிறப்பான ஆன்மீக பணிகளை முன்னெடுத்தார்.

இவரைத் தொடர்ந்து கிபி 2015 முதல் 2019 வரை அருட்பபணி அடைக்கலசாமி ஓபிரேம் அவர்கள் பங்குதந்தையாக மீண்டும்பொறுப்பேற்றார். இவர் தனது பணி காலத்தில் மக்கள் இறைவனிடம் எந்நேரமும் ஜெபிப்பதற்காக ஆலயத்தை ஒட்டி அழகானது ஒரு நற்கருணை ஆலயம் ஒன்றை அமைத்தார். இன்றளவும் பல மக்கள் ஆண்டவரிடம் அமைதியாகபேசவும், தம் தேவைகளுக்காக மன்றாடவும் நற்கருணை ஆலயத்தை நாடிவந்து எந்நேரமும் முழங்காலில் நின்று மன்றாடிய வண்ணம் இருப்பார்கள். இவர் தன் பனிக்காலம் முழுவதும் இறைமக்களுக்கு நல்ல ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரைத் தொடர்ந்துகிபி 2019 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நம் பங்கின் பங்கு தந்தையாக பொறுப்பேற்று நம்மை வழி நடத்திக்கொண்டிருப்பவர்,

அருட்பணி ரெட்டின்ராஜ் ஓப்ரேம் அவர்கள். மிகக்குறைந்த வயதிலேயே பங்குத்தந்தையாக பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல் நமது பங்குதான் அவருக்கு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற முதல் பங்கு என்பதுகூடுதல் சிறப்பு. மிகவும் எளிமையான தோற்றத்துடன் குழந்தைகளுடன் அதிக அன்புடனும் பழகும் குணம் கொண்டவர். இவர் பெரியோர்களிடம் காட்டும் பணிவும் குழந்தைகளிடம் காட்டும் அன்பையும் கண்டு பல குழந்தைகள் இவரைப்போல குருவாகமாற ஆர்வம்காட்டிய துண்டு.குழந்தைகளை ஆலயத்துக்கு வரவைப்பதற்காகவும், மறைக்கல்வியை ஆர்வமுடன் பங்கேற்கவைப்பதற்காகவும் அவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை உற்சாகமூட்டியவர். நம்பங்கில் நீண்டகாலமாக பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருந்தாலும் அவை அனைத்திற்கும் உயிரோட்டம் கொடுத்தவர் இவர். பெரியவர்களுக்கான வின்சென்ட்தேபால் சபை மற்றும் மரியாயின் சேனைக்கான வெள்ளிவிழாவினை சீரும்சிறப்புமாக நடத்தி பல குழந்தைகளின் கல்விக்கான நல உதவியை செய்யதூண்டியவர். இளைஞர்களுக்கான இளையோர் இயக்கத்தைதுடிப்புடன் நடத்ததூண்டியவர். பங்கில் உள்ள பெண்களை உற்சாகப்படுத்தும் வகையில் பெண்கள் பணிக்குழுவை அமைத்து அவர்களை ஆன்மீக காரியங்களில், பங்கின் பல்வேறு வளர்ச்சி பணிகளிலும் அவர்கள் ஆர்வமுடன் செயல்பட தூண்டியவர். முதன்முதலில் பங்கில் குழந்தைகளுக்கான மறைக்கல்வி மன்றத்தைதுவங்கி, அதற்கான ஆசிரியர்களை நியமித்து, குழந்தைகளுக்கு நல்ல தொருமறை கல்வியும் வாழ்க்கை நெறிமுறைகளையும் கற்றுக்கொள்ள வழிவகுத்தவர். பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும் பல்வேறு அன்பியங்கள் மூலம் ஒன்றிணைத்து, அனைத்து அன்பியங்களையும் சிறப்புடன் செயல்படவைத்து அன்பால் அனைத்து குடும்பங்களையும் ஒன்றாக இணைத்தவர். மேலும், இவர்தனது பனிக்காலத்தில் கொரோனா என்னும் கொள்ளைநோயினால் உலகமே பாதிப்படைந்திருந்த நிலையில் பங்கில் வேலை இன்றி கஷ்டப்படும் பலகுடும்பங்களுக்கு பக்தசபைகள் மூலம் நிதி திரட்டி அவர்களுக்கு பல உதவிகள் செய்தவர்.

மேலும் ஆலயத்தில் பல அருள் பணியாளர்கள் ஒரு சேர இணைந்து திருப்பலி நிறைவேற்றுவதற்கு ஏதுவாகவும் ஆலயத்திற்கு வெளியில் அமைந்திருப்பவர்கள் கூட திருப்பலியில் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெறும் வண்ணம், ஆலயத்தில் மிகச்சிறியதாக இருந்த பலி பீடத்தை உயர்த்தி விரிவாக்கம் செய்தார். மேலும் பங்குமக்களின் கோரிக்கையின் பேரில், பங்குமக்கள் ஆலயம் வந்து செல்லும் போது கழிப்பறை இல்லாமல் சிரமப்படுவதை பார்த்து அவர்களுக்கென்று ஆலய வளாகத்தை ஒட்டி கழிப்பறைகட்டினார். மேலும் எவ்வித பாதுகாப்பு இன்றி கம்பிவேலி உடன் இருந்த ஆலை வளாகத்தை, அழகான ஒரு சுற்று சுவர் எழுப்பிமழைக்காலங்களிலும் மற்ற நேரங்களிலும் பாதுகாப்புடன் இருக்கவழி செய்தார்.மேலும் இவர் முப்பதாம் வருட தேர்த்திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், வருடம்தோறும் ஒற்றையாக பவனி வந்த மாதாவின் தேரோடு புனித சூசையப்பர் மற்றும் புனித மைக்கேல் சம்மனசுக்கான தேர்களையும் பவனியாக வர ஏற்பாடு செய்து பங்கு மக்களின் ஒத்துழைப்போடு புனிதமைக்கேல் சம்மனசுக்கு ஆலய வளாகத்திலேயே புதிதாக தேர் செய்து மூன்று தேரும் பிரம்மாண்டமாக பவனிவரச் செய்தவர்.மேலும் 30 ஆம் வருட திருவிழாவையும், தனிதேர்வு நிலை பங்காகி 25 ஆம் வருட வெள்ளி விழாவையும் சிறப்பிக்க எண்ணற்ற முயற்சிகள் செய்தவர் நம்தந்தை அருள்ரெட்டின்ராஜ் ஓப்ரேம்அவர்கள்.

நம் புனிதர்களின் அரசியின் 30 ஆவது வருடவிழாவும், நமதுஆலயம்தனி பங்காகி 25 ஆம் வருடவிழாவும் கொண்டாடும் இந்த பொன்னானநேரத்தில், இதற்காக உழைத்தஅ னைத்து அருட்தந்தையர்களையும் இங்கே நினைவுகூர்ந்து கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நம் அனைவரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்ககடமைப்பட்டுள்ளோம். பங்கு தந்தையர்கள் நம் பங்கின் வளர்ச்சிக்கு தூண்களாக செயல்பட்டார்கள் என்றால் இவர்களை தாங்கிப்பிடிக்கும் கரங்களாக இருந்து இவர்களுடைய ஆன்மீக பணியில் தொய்வில்லாமல் இருக்க இவர்களுக்காக உதவியர்கள், நம்பங்கில் பணிபுரிந்த உதவி பங்குதந்தையர்கள். இவர்கள்,பள்ளி நிர்வாக பணியோடு நின்றுவிடாமல் பல்வேறு ஆன்மீக காரியங்களில் பங்குதந்தையர்களுக்கு உதவியாகவும், இறைமக்களை ஆன்மீககாரியங்களில் வழிநடத்தும் நல்ல வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தவர்கள்.இவர்களுக்கும் இந்நேரத்தில் நம் நெஞ்சார்ந்தநன்றிகளை தெரிவிப்போம்.

உதவி பங்கு தந்தையர்கள்
  • அருள் பணி.எம் ஆரோக்கியசாமி ஓப்ரேம்

  • அருள் பணி.ஆரோக்கியசெல்வன் ஓபிரேம்

  • அருள் பணி.K ஆரோக்கியசாமி ஓப்ரேம்

  • அருள் பணி.அருள்ராஜ் ஓபிரேம்

  • அருள் பணி.செங்கோல் ஓபிரேம்

  • அருள் பணி.தாமஸ் ஆல்வா எடிசன் ஓபிரேம்

  • அருள் பணி.ஆரோக்கியராஜ் ஓபிரேம்

இவர்களோடு இணைந்து ஆலயத்தின் வளர்ச்சிக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்த ஆசிரியை ஸ்டெல்லா அவர்களுக்கும் மற்றும் 1977 வருடம் துவங்கி, இந்நாள் வரை பங்கின் வளர்ச்சிக்கு அவரைப்போன்று பல்வேறு வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இங்கே நன்றி கூறுவோம்.

அவர்களில் பலர் இன்று நம்மிடையே இல்லாமல் போகலாம். ஆனால் இன்றளவும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய முழு முயற்சியாலும், அயரா உழைப்பாலும் அரும்பாடு பட்டு நம் கேகே நகர் பங்கிற்கன ஆலயம் அமைக்க திட்டமிட்டு ஒன்றுமில்லாத இடத்தில் ஓட்டு கொட்டகையில் ஆலயம் அமைத்து, ஓட்டுகொட்டகை இன்று காலமாறு பாட்டுக்கேற்ப, அனைத்து வசதிகளும் நிறைந்த கான்கிரீட் ஆலயமாக மாற்றி தந்திருக்கிறார்கள். அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நாம் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் புனிதர்களின் அரசியும், அவரது இறைமகன் இயேசுவும் நமக்காக விட்டுச்சென்ற கல்வாரிப்பலியை உயிரோட்டம் உள்ள திருப்பலியாக இந்த ஆலயத்தில் தினந்தோறும் நிறைவேற்றவும், இறைமக்கள் எப்பொழுதும் எல்லா நிகழ்வுகளிலும் ஒற்றுமையுடன் இணைந்து ஆலய வளர்ச்சிக்காக பணிபுரியவுமே! ஒற்றுமையுடன் இருப்போம் இணைந்து செயல்படுவோம் புனிதர்களின் அரசுக்கு என்றுமே மகிமை சேர்ப்போம்.

மரியேவாழ்க!